Skip to content

இருள் சூழும் வேளை

Published: at 08:23 PM

இருள் சூழும் வேளை
இதயம் தளர்ந்தால்
உம் கரம் பிடிக்கின்றதே
இனி என்ன வாழ்வு
எனச் சோரும்போது
உம் அருள் பொழிகின்றதே

  1. நீர் தந்த வாழ்வில்
    நிம்மதி இல்லை
    நினைவுகள் எல்லாம்
    நலமாகவில்லை
    நிந்தனை நடுவிலும்
    நாம் வாழ்கிறோமே
    நிமலா உம் ஆசி
    தர வேண்டுமே

  2. உம் தேவைக்காக
    எம்மை படைத்தாய்
    உம் சேவை செய்ய
    ஏவி நின்றாய்
    எம் தேவையெனோ
    மறந்து விட்டீரே
    எம் ஆசை யாவும்
    அழிந்ததுவே

  3. மூள்முடி தாங்கி
    சிலுவையின் மீது
    மூள் ஆணி குத்தி
    மரித்தனையோ
    மரித்தாலும் நாதா
    எமக்காக உயிர்த்த
    உம் அன்புக் கேதும்
    இணையாகுமோ

  4. வருங்காலமெல்லாம்
    வளமாக வேண்டும்
    வாதை நோய் இன்றி
    நாம் வாழ வேண்டும்
    எது வந்த போதும்
    உம் நாமம் மறவா
    இதயம் எமக்கு
    தர வேண்டுமே